தமிழகத்தில் புதியதாக நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த வலுவான புயல் சென்னையை நோக்கி 630 கி.மீ தொலைவில் வேகமாக கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“நிவர் ” புயல்
தமிழகத்தில் போன ஆண்டே கஜா என்ற புயல் கோரத்தாண்டவம் அடியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்தனர். அதில் ஏற்பட்ட இழப்பு ஒன்று இரண்டு அல்ல ஏராளம். மக்கள் குடியிருப்பு இடங்களும் மற்றும் விவசாய நிலங்களும் அழித்து நாசம் ஆக்கியது இந்த கஜா புயல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று புதியதாக “நிவர்” என்ற புயல் உருவாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு ஒளி என்று அர்த்தமாம். நிவர் என்ற புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
புயல் சின்னம் மையம்:
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 2 தினங்களில் சென்னை மற்றும் காரைக்கால் இடையில் கரையை கடக்கும். இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது. இந்த நிவர் என்ற புயல் சின்னம் சென்னையிலிருந்து 630 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் 600 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் மூலம் தெரிய வருகிறது. இதனால் சென்னையில் 630 கி.மீ தொலைவில் அதிவேகமாக கரைய கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த புயலின் காரணமாக சென்னை மற்றும் பல இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.