தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன..?
சென்ற 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை மாநிலம் முழுவதும் நடத்தியது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதற்கான முடிவுகளும் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் 40 இடத்தைப் பிடித்தவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கீழக்கரை தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
தீவிர விசாரணை…!
இந்த முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் முதல் 40 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றது உறுதியானது. வேறு எந்த மையங்களிலும் முறைகேடு நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தேர்வு மையங்கள் ரத்து…!
விசாரணையில் தேர்வர்கள் ஒரே மாதிரியான பதில்களை கூறியதால் சந்தேகம் மேலும் அதிகமானது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரி, ஒரு தனியார் பள்ளி என மொத்தம் 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை..!
ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் இடைத்தரகர் உதவியுடன் தேர்வெழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பதில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
சிபிசிஐடி கையில் எடுத்தது..!!
இந்த முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |