Tuesday, May 14, 2024

மத ரீதியாக கொலை மிரட்டல் விடுகின்றனர் – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வருத்தம்!!

Must Read

தமிழ்நாடு வெதர்மேன் ஆக சென்னையில் பணிபுரிபவர் தான் பிரதீப்ஜான். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவது மட்டுமல்லாமல் மதரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமார் கொலை மிரட்டல் விடுபவரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனம் தெரிவித்து வருகிறார்.

வெதர்மேனுக்கு கொலை மிரட்டல்

பிரதீப்ஜான் சென்னை மக்களுக்குக்கிடையே பெயர் எடுத்தவர் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் வானிலை ஆய்வின் மீது உள்ள காதலால் இந்த தொழிலை விருப்பத்துடன் செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் வேறொரு தொழிலையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழைக்காலங்களில் இவரது பதிவுகளை நகரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கேட்டு பின் தொடருபவர்கள் அதிகம். மேலும் இவர் சென்னையில் ஏரியா வாரியாகவும் வானிலை பதிவுகளை வெளியிடுவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

pradeep jaan
pradeep jaan

இத்தகைய பணிகளை செய்து வரும் இவர்க்கு தீடீரென கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் ஒருவர் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்டில் “உனக்கு வானிலை அறிக்கை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும், வானிலை அறிக்கை மீது அவதூறு பேசுகிறார் மற்றும் அவர் கூறுவது அனைத்தும் பொய்யானவை” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் சிலர் அவர்க்கு கொலைமிரட்டல் மற்றும் மதரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர். இதற்கு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆதரிக்கும் ரசிகர்கள்

இவரின் பதிவுக்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு பதிலடியாக உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பார்க்க வேண்டாம்என்றும், நான் ஒருபோதும் வானிலை ஆய்வு மையத்தை குறிப்பிட்டு பேசுவது இல்லை என்றும், எனக்கான நேரத்தில் தான் இந்த பணியை செய்கிறேன் என்றும் கூறினார். இத்தகைய கொலைமிரட்டல் விடுவது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். இதனை கண்டு வருத்தம் அடைந்த அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

weatherman pradeep jaan
weatherman pradeep jaan

அவரது ரசிகர்கள் அவரை ஆதரிக்கும் வகையில் உங்களுடைய சேவையை தொடருங்கள் என்றும் மனஉளைச்சலை ஏற்படுத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ரசிகர்கள் மட்டும்மல்லாமல் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளரான ரவிக்குமார் பிரதீப்ஜான் மீது கொலைமிரட்டல் விடுத்தவர் மீது தமிழக அரசு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -