கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய வானிலை மையம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
Enewz Tamil WhatsApp Channel
அதோடு தமிழகத்தின் கடலோர மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகியவற்றில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாம். இதனால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.