தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் இன்று (அக்டோபர் 9) காலை தொடங்கியது. இதில் கடந்த ஆட்சியில் 1,296 கோடி செலவில் முல்லை பெரியாறு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நகர்வது போல் உள்ளது என அ.தி.மு.க.வின் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி இருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “முல்லை பெரியாறு பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து விடும். இதன் பிறகு செல்லூர் ராஜு கேட்டது போல் சுத்தமான தண்ணீரை மக்களுக்கு நிச்சயமாக வழங்குவோம்” என தெரிவித்தார். இதற்கிடையில் அமைச்சர் துரைமுருகன், “பணிகள் முடியும் வரை அணைகளில் தண்ணீர் பாதுகாப்பாக இருக்க தெர்மாகோல் போட்டுள்ளோம்.” என செல்லூர் ராஜூவை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.
காவேரி நீர் திறப்பு விவகாரம்…, தமிழக முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!