தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே மாணவர்களை தேவையற்ற வேலைகளை செய்ய சொல்கின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் ஆலந்துறையில் உள்ள அரசு ஊராட்சி பள்ளியில் தேன்கூடு ஒன்று இருந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதை கலைக்கும்படி அப்பள்ளி தலைமை ஆசிரியர் 5ம் வகுப்பு சிறுவனிடம் கூறியுள்ளார். அதன்படி அந்த சிறுவனும் தேன் கூட்டை கலைக்க துணியை சானிடைசரில் நனைத்து தீ வைத்து தேன்கூட்டை சுற்றி எறிந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவனுடைய சீருடைகள் பட்டதால் அவனுக்கு தீக்காயம் பலமாக ஏற்பட்டுள்ளது இதனால் பின் இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை மெட்ரோ பயணிகளே…, உங்களுக்காகவே வெளியான மாஸ் அப்டேட் இதோ!!