சென்னை மெட்ரோ பயணிகளே…, உங்களுக்காகவே வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

0
சென்னை மெட்ரோ பயணிகளே..., உங்களுக்காகவே வெளியான மாஸ் அப்டேட் இதோ!!
சென்னையில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பல்வேறு சாலை பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டன. ஆனால், மெட்ரோ ரயில் சேவை மட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்பட்டது.
இதனால், பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். இதன் விளைவால், மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாகவே பயணிகளுக்கு பிளாஸ்டிக் அட்டை மூலம் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையில், இன்று (டிசம்பர் 7) மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம், இன்று (டிசம்பர் 7) வழக்கத்தை விட அதிக பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here