பெட்ரோல் கேனுடன் பீடி பற்ற வைத்த நபர் உடல் கருகி பலி – திருப்பூரில் நடந்த கொடூரம்!!

0

திருப்பூர் மாவட்டத்தில் 40 வயது மர்ம நபர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் கேனை கையில் வைத்து கொண்டு பீடி பற்ற வைத்ததால் விபத்து ஏற்பட்டு இவர் உயிர் இழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

திருப்பூர்:

தற்போதைய காலங்களில் அனைவரும் எந்த ஓர் வேலையை செய்தாலும் அதில் கவனமில்லாமல் செய்து வருகின்றனர். அதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. தற்போது இதே போல் ஓர் சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூரில் தாராபுரம் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலையத்தில் ஓர் எலெக்ட்ரானிக் கடை உள்ளது. அதற்கு பக்கத்தில் ஓர் ஆணின் சடலம் கருகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை கயல் ஆனந்திக்கு ரகசிய திருமணம்?? ரசிகர்கள் ஷாக்!!

தகவலின் பெயரில் அங்கு விரைந்த திருப்பூர் ஊரக காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து அங்கு விசாரணை செய்து வந்தனர். மேலும் அந்த ஆணின் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த நபருக்கு வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து விசாரித்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அந்த பதிவில் ஓர் ஆண் கையில் பெட்ரோல் கேனுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவர் பீடி பத்தவைத்துள்ளார். அதில் உள்ள தீப்பொறி பெட்ரோல் கேனில் பட்டு, பிறகு அவர் உடல் முழுவதும் தீ பரவியது. இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here