திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – ஆந்திர அரசு ஒப்புதல்..!

0
Tirupathi Temple
Tirupathi Temple

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

திருப்பதி கோவில்:

இந்தியாவில் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த அன்லாக் 1.0 எனப்படும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூன் 8 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதில் பரிசோதனை முயற்சியாக தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்களை கொண்டு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் 8 அடி தனி மனித இடைவெளி விட்டு தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here