இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை 50 ரூபாயாக இருந்த திருப்பதி லட்டின் விலையை பாதியாக அதாவது 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் தரிசனம்:
ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பதி உட்பட நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. தரிசனம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் பக்தர்களுக்கு ஏழுமலையானின் பிரசாதத்தை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது ஊரடங்கால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஒரு லட்டின் விலை ரூ. 50ல் இருந்து ரூ.25 ஆக குறைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் சுப்பாரெட்டி, ஊரடங்கு முடியும் வரை இந்த விலைகுறைப்பு அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளார். மேலும் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள தேவஸ்தான மையங்களில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் விற்பனையை தொடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |