ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக மோகன்லால் தனது 60வது பிறந்தநாளான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
திரிஷ்யம் 2:
மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை ஒட்டி அவரது ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்து மழையால் அவரை நனைய வைத்து வருகின்றனர். இவர் நடிப்பில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 75 கோடி ரூபாய் வசூல் செய்து ‘திரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, சிங்களம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் இது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது. மோகன்லால் நடித்த திரிஷ்யம் திரைப்படத்தில் முதல் பாகத்தில் அவர் போலீஸ் அதிகாரியின் மகனை கொன்று காவல் நிலையத்தில் புதைத்து இருப்பார். இரண்டாம் பாகம் அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரி அதனை கண்டுபிடிக்கிறாரா என்பதை மையமாக வைத்து உருவாகும் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |