இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் வேலையை ஸ்விகி நிறுவனம் தொடங்கி உள்ளது. இதனால் ஆன்லைன் மதுபான விற்பனை அங்கு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
ஆன்லைன் விற்பனை:
இந்தியாவில் ஒவ்வொரு ஊரடங்கு அறிவிப்பின் பொழுதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மதுபான விற்பனையை தொடங்க அரசு அனுமதி அளித்தது. பல நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகளை திறக்கும் பொழுது கூட்டம் அலைமோதும் என்பதால் அதனைத் தடுக்க ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கே டெலிவரி செய்யும் முடிவை கையில் எடுத்தன.
இந்த பணியில் ஜார்கண்ட் அரசுடன் ஸ்விகி நிறுவனம் இணைந்து உள்ளது. அதில் முதற்கட்டமாக தலைநகர் ராஞ்சியில் ஆன்லைன் மது விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இது பல நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது வயதினை உறுதி செய்ய ஏதேனும் ஒரு அடையாள அட்டை மூலம் ஆன்லைனில் மது ஆர்டர் செய்து கொள்ளலாம். அதன்பின் வரும் OTP எண்ணை பயன்படுத்தி டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |