பெரும்பாலான பெண்களை அதிகமாக தாக்கி கொண்டிருக்கும் தைராய்டு நோய் பற்றித்தான் பார்க்க போகின்றோம். இன்றைக்கு நூற்றில் எண்பது சதவீதம் இளம் பெண்கள் இந்த தைராய்டு நோயினால் பாதிக்கபடுகிறார்கள். இதற்கு காரணம் நம் ஒழுங்கற்ற சாப்பிட்டு முறை தான். பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகிறது. தைராய்டு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள், உணவுமுறைகளை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
தைராய்டு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:
அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுவதனால் நமது தைராய்டு சுரப்பி சரியாக சுரக்காமல் நமது உடலிற்கு தேவையான ஹார்மோன்கள் கிடைப்பதில்லை. அதனால் உடலின் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. பெண்கள் வயது வந்த காலங்களில் இருந்தே இப்பிரச்சனை வர தொடங்குகிறது.
அதனால் வயதுக்கு வந்த சில மாதங்களிலேயே தைராய்டு சோதனை செய்து கொள்வது மிக நல்லது. இதற்கான அறிகுறிகள் முகம் மற்றும் கீழ் தாடையில் முடி வளர்வது, முறையற்ற மாதவிடாய், மனஅழுத்தம், தேவையில்லாமல் கோபம் வருதல், அதிகப்படியான முடி உதிர்வது, தாம்பத்திய உறவுகளில் நாட்டம் இல்லாமை போன்றவை.
உணவு முறைகள்:
- மைதா, பாலிஷ் ரைஸ், கோதுமைமாவு, பாக்கெட்களில் பத்தப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பொருட்கள், காலிப்ளவர் , முட்டைகோஸ், பால், தாயில், மோர், வெண்ணெய் போன்றவை சாப்பிட கூடாது.
- குக்கரில் சமைத்தவற்றை சாப்பிட கூடாது. சால்ட் என்று சொல்லப்படும் தூள் உப்புகளை பயன்படுத்த கூடாது. இதற்கு பதிலாக பிங்க் சால்ட் அல்லது இந்துப்பு போற்றவற்றை பயன்படுத்தலாம்.
- கடைகளில் கிடைக்கும் ஆயில்களை பயன்படுத்த கூடாது. செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய் போற்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது, வீட்டில் சுத்தமாக தயாரிக்கபட்ட பசு நெய்யை பயன்படுத்தலாம்.
சாப்பிட கூடிய உணவுகள்:
- அதிகமான கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், சிறுதானிய வகைகள் ஆகியவை.
- குறிப்பாக சௌ சௌ என்று சொல்லப்படும் நீர் காய்களை சாலட், ஜூஸ் அல்லது பொரியலாகவும் செய்து வாரம் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும்.
- அவள் மற்றும் பச்சை பயறு போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.மேலும், அடிக்கடி மல்லி தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வெற்றிலையை அடிக்கடி சாப்பிட்டால் அதிலுள்ள பொட்டாசியம், தைராய்டு ஹார்மோன்களை சீராக வைக்க உதவுகிறது.
- தினமும் காலையில் எழுந்து பல் துலக்கியதும் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய் பால் சாப்பிடுவது தைராய்டு நோய்க்கு மிக சிறப்பு. நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
- முடிந்த அளவு சோப் போற்றவற்றை பயன்படுத்தாமல் இயற்க்கை குளியலை பழக்க வேண்டும்.
- மேலே, சொல்லப்பட்ட விதிமுறைகளை பின் பற்றினால் தைராய்டு நோயில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.