சென்னையில் கடந்த ஒரு வாரமாக, தங்கத்தின் விலை சொற்ப அளவில் கூடி குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,072 விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா தேர்தல்
நிலம், கட்டிடத்தில் முதலீடு செய்து வந்த மக்கள், தற்போது தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கொரோனா ஏற்படுத்திய தாக்கமே முக்கிய காரணம். ஊரடங்கு கால கட்டத்தில், தங்கம் உடனடியாக பணமாக மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இரக்கம் காணப்பட்டது.தீபாவளி நெருங்கும் வேளையில், விலை குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நவம்பர் 3ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்வு நடக்க உள்ளதால், தங்கத்தின் விலையில் பாதிப்பு இருக்கலாம். இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை (22 காரட் ) ரூ. 2 குறைந்து, ரூ.4759க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம் ), ரூ. 38,072 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில், வெள்ளி ஒரு கிராம் ரூ. 66.20 ஆக விற்க்கப்படுகிறது.