‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு வந்த வாய்ப்பு….,அடுத்த 10 வருஷத்த ஒட்டிடலாம்…,

0
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு வந்த வாய்ப்பு....,அடுத்த 10 வருஷத்த ஒட்டிடலாம்...,
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு வந்த வாய்ப்பு....,அடுத்த 10 வருஷத்த ஒட்டிடலாம்...,

தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. மிஸ் சென்னை பட்டம் வாங்கிய கையோடு சினிமாவுக்குள் நுழைந்த நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பல கோடிகளை குவித்து வசூல் சாதனை நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கான வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்திருக்கிறார் த்ரிஷா. அதாவது, நடிகை த்ரிஷாவின் கைவசம் தற்போது 7 திரைப்படங்கள் இருக்கிறது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…..,’பையா’ 2 ஆம் பாகத்தில் கார்த்தி?

த்ரிஷா நடிப்பில் உருவான சதுரங்க வேட்டை 2 மற்றும் தி ரோட் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது. இது தவிர, விஜயுடன் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. மேலும், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அஜித்தின் ‘விடா முயற்சி’, தனுஷின் 50 ஆவது படம், மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவற்றில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here