தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான பெர்பாமன்ஸ் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகை சுனைனா. ஒரு படத்தில் கமிட் ஆனோமா, ஹீரோவுடன் காதல் செய்தோமா, டூயட் பாடினோமா என்று இல்லாமல் தனது நடிப்புத் திறமையை சிறப்பான கதாப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்து வருகிறார் இவர்.
அந்த வகையில், நடிகை சுனைனா தற்போது ‘ரெஜினா’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கான பட ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் சுனைனா சமீபத்தில் தான் சினிமாவுக்கு வந்த நிகழ்வைப் பற்றி கூறி இருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு வந்த வாய்ப்பு….,அடுத்த 10 வருஷத்த ஒட்டிடலாம்…,
அதாவது, சுனைனாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்தது ரஜினிகாந்தை பார்த்து தானாம். சிறிய வயதில் உறவினர் வீட்டுக்கு வருகையில் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தை பார்த்துள்ளார். இவரைப் போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டாராம். அப்போது, துவங்கிய சினிமா மீதான ஆர்வம் இன்று வரை இருப்பதாக சொல்லி இருக்கிறார் நடிகை சுனைனா