நாட்டு வெடிகுண்டு வீசி காவலரை கொலை செய்த ரவுடி என்கவுண்டர் – தூத்துக்குடியில் பரபரப்பு!!

0

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு முயன்றவர்களை தடுக்க முயன்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மணல் கொள்ளையில் ரவுடிகள்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்தவர் துரைமுத்து. இவருக்கு இரட்டைக்கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. தற்போது ஜாமினில் வெளியே உள்ள துரைமுத்து வல்லநாடு மனக்கரை அருகே தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Police Subramanian
Police Subramanian

இன்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணல் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி துரைமுத்து போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். அதில் சிக்கிய சுப்ரமணியன் என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெடிகுண்டு தாக்குதலில் ரவுடியும் உயிரிழந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப்பணி ஒதுக்கீடு – மாநில அரசு அதிரடி முடிவு!!

ஆனால் ரவுடி துரைமுத்து தப்பிக்க முயன்ற போது போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here