சீனாவில் தொடங்கி தற்போது உலகையே பயத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஹவான் நகரின் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து பரவிய கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கோனார் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலும் சிலருக்கு பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு நேபாளத்துக்கு அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், பீகார் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்திலும் சீனாவிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது. விமானநிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்கின்றனர். நம்மிடம் கையிருப்பில் தேவையான மருந்து மாத்திரைகளும் உள்ளன. மேலும் மக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |