துருக்கி நாட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அதே பெண்ணையே அந்த நபர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு உள்ளது.
அதிகரிக்கும் குழந்தை திருமணம்..!
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெற்காசிய நாடுகளில் குழந்தை திருமணம் என்பது அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த, 10 ஆண்டுகளில், மொத்தம் 4,82,908 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துள்ளன. கடந்த, 2017ம் ஆண்டு மட்டும், 21,957 சிறுமிகள் கர்ப்பமாகினர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கற்பழிக்கப்பட்டால் அந்த பெண்ணையே திருமணம்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்த குற்றங்களை கட்டுப்படுவதற்க்காக துருக்கி அரசு பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டால், அந்த பெண்களையே, திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கும் சட்ட மசோதாவை கடந்த 2016ம் ஆண்டே பார்லிமென்டில் தாக்கல் செய்தது. ஆனால் இந்த திட்டம், கற்பழிப்பு, குழந்தை திருமணம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்ததால் சட்டம் நிறைவேற்றபடவில்லை . இந்நிலையில் அந்த சட்டம் தற்போது பார்லிமென்டில் அமல்படுத்தப்படவுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |