சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 326 மாணவ-மாணவிகள் ரோபோ மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினர்.
‘எஸ்பி ரோபோட்ஸ் மேக்கர் லேப்’ மற்றும் ‘கம்யூன்ட்ரீ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பள்ளி மாணவ – மாணவியர், ‘ரோபோ’வை பயன்படுத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஒரு உலக சாதனை முயற்சியாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 326 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ரோபோவினை மொபைல் ஆப் வழியாக செயல்படுத்தி 15 வகைகளில் மரக்கன்றுகளை நட்டனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாவது, சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும், ரோபோ பயன்பாடு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுத்தமான காற்று, சுகாதாரமான சூழல் கிடைக்க, பள்ளி, கல்லுாரி வளாகங்களில் அடர்த்தியான காடு அமைத்து வருகிறோம். ரோபோ நடுவதால், 100 கிராம் எடையில் மரக்கன்றுகள் தயாரித்தோம் என்றும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பள்ளி படிப்புடன், ரோபோ தொழில்நுட்பத்தையும் கற்று வருகிறோம்.ரோபோவை பயன்படுத்தி மரக்கன்று நட்டது, புது அனுபவமாக இருந்தது மற்றும் வேறு பணிகளுக்கும் ரோபோ பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை தற்போது கற்று வருகிறோம் என்று தெரிவித்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |