சீனாவில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அரசு நகரங்களை முடக்கியும் மேலும் ஆறே நாட்களில் 100 படுக்கையறைகளுடன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஹைடெக் மருத்துவமனையையும் கட்டிமுடிக்க முடிவு செய்துள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
கொடூர கொரோனா வைரஸ்..!
சீனாவின் வுஹன் நகரத்தில் ஒரு இறைச்சி சந்தையில் கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. மேலும் இது வவ்வாலை தின்னும் ஒரு கட்டு விரியன் பாம்பிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1100 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சில நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் சிலருக்கு அந்த அறிகுறிகள் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் சீனா மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
4 கோடி பேர் வீட்டில் முடக்கம்..!
கொரோனா வைரஸ் தாக்குதலை பயத்தால் சீனாவின் மத்திய நகரமான ஹவான் முழுவதும் 4 கோடி மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். மேலும் அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊருக்குள் மக்கள் நுழையவும், வெளியேறவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ராணுவத்தில் இருக்கும் மருத்துவ துறையினர்தான் பாதுகாக்கப்பட்ட உடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக பிரத்யேக உடை தயார் செய்யப்பட்டுள்ளது.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
6 நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை..!
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வேறு நோயாளிகளும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்களை தனிமைப்படுத்தி ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 1000 படுக்கை அறைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இது பிப்ரவரி 2க்குள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. சீனா அரசின் இந்த துரித நடவடிக்கையை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |