சமீபகாலமாக வயது வித்தியாசம் இல்லாமல் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் இதயத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் இது குறித்து துலேன் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் 4,50,000 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் முடிவில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய நோய் ஏற்படுவதை 20% தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதய நோயால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் அதிக முறை படிக்கட்டுகள் ஏறும் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.