இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்ட உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது பயிற்சி ஆட்டம் கனமழையால் நிறுத்தப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான இரண்டாவது ஆட்டம் கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட இருந்தது. இதற்காக, இரண்டு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரளாவில் நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதய நோய் வராமல் தடுக்க இதை மட்டும் செஞ்சா போதும்., ஆய்வில் வெளிவந்த உண்மை!!