கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் நடிக்கும் தர்ஷன், லாஸ்லியா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் மலையாள ரீமேக்கான புதிய படத்தில் அவருடன் இணைந்து பிக்பாஸ் சீசன் 3 புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தர்ஷன் மற்றும் லாஸ்லியா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர்கள் இருவரும் பிக்பாஸ் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அப்போட்டியில் தனது நேர்மையாலும் உண்மையாலும் அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றவர் தர்ஷன்.

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் – வெளியான புகைப்படங்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிஜமான அண்ணன் தங்கை போலவே நடந்து கொண்ட தர்ஷன் மற்றும் லாஸ்லியா தற்போது ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். பிக்பாஸ் முடிந்த பின்பு லாஸ்லியா தனது புதுப்படங்களின் அப்டேட்களை கொடுத்து வந்தார். தர்ஷன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் அவருடன் சேர்ந்து இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மலையாள இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சிராமூடு நடிப்பில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25’ என்ற படத்தின் ரீமேகில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இயக்கவுள்ளனர். ‘கூகுள் குட்டப்பன்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் தந்தை கதாபாத்திரத்தில் கே.எஸ் ரவிக்குமார் நடிக்க அவரது மகனாக தர்ஷன் நடிக்கிறார். படத்தின் பெண் கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமையக்க உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்ததாவது, ‘சபரியும் சரவணனும் இந்த படத்தை இயக்கப்போவதாகவும் நான் அதில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். சில காரணங்களுக்காக இந்த படம் தடைபட்டு நின்றது. தற்போது இந்த படத்தின் உரிமையை நான் வாங்கி தயாரிக்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

தனது சதியால் வீட்டை இரண்டாக்கும் மீனாவின் அத்தை – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

தொடர்ந்து ‘இப்படத்தின் இசையமைப்பு வேலைகள் இன்று ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து படப்பிடிப்பு பிப்ரவரி 15 ம் தேதி முதல் துவங்கவுள்ளது. படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ரோபோ ஒன்று நடிக்க உள்ளது. படத்தில் அதிகமான vfx காட்சிகள் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here