தனது சதியால் வீட்டை இரண்டாக்கும் மீனாவின் அத்தை – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல பிரச்சனைகளுக்கு பிறகு இப்பொழுது தான் பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமாக ஒளிபரப்பானது. மறுபடியும் மீனா பழைய மாதிரி சண்டையை இழுக்க ஆரம்பித்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பதை அடுத்து வீட்டில் உள்ள அனைவரும் தனத்தை கவனித்து கொள்கின்றனர். அதோடு தனத்திற்கு பொறுப்பு முல்லையிடம் மொத்தமாக போயிடுவோமோ என்ற பயம் வேறு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதோடு அடிக்கடி மீனா வீட்டில் உள்ளவர்களை குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார். போதாதகுறைக்கு மீனாவின் அத்தை இரண்டுக்கு மூன்றாக மீனாவிடம் ஏத்திவிட்டு பிரச்சனை ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறார். நேற்று கூட வீட்டிற்கு பின்னால் தனியாக அடுப்பு வைத்து சமைத்து கொடுத்தார் மீனாவின் அத்தை.

ஜீவா மீனா இடையே பிரச்சனை தான் ஏற்பட்டது. இதனை ஜனார்தனனிடம் சொல்லிவிட நேற்றைய எபிசோடில் ஒரு கேஸ் அடுப்பை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக் ஆனது. இப்பொழுது வெளியான ப்ரோமோவில் கேஸ் அடுப்பை கட்டாயப்படுத்தி மாட்டி விடுகிறார் ஜனார்த்தனன்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பின்னடைவு – 2 சங்கங்கள் விலகல்!!

இதனை பார்த்த குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியடைகின்றனர். வீட்டிற்கு ஜனார்த்தனன், ஜீவா அனைவரும் வர இரண்டு அடுப்பு உள்ளே இருப்பதை பார்த்து என்ன என்று கேட்க நடந்தவற்றை சொல்கிறார் தனம்.

மீனாவும் இரண்டு அடுப்பு இருந்தா என்ன?? குழந்தைக்கு தேவைப்படுது என்று சொல்லி விடுகிறார். மேலும் ஜீவாவிற்கு மீனாவிற்கு வழக்கம் போல சண்டையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here