டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது அந்த போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகப்போவதாக அறிவித்துள்ளது.
டெல்லி:
டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றனர். இன்றோடு இவர்கள் போராட்டம் தொடங்கி சுமார் 64 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் இவர்களுக்கு ஓர் தீர்வு கிடைக்கவில்லை. மேலும் கடந்த குடியரசு தின விழாவில் இவர்களது போராட்டம் எல்லையை மீறியது. டிராக்டர்களை கொண்டு செங்கோட்டையை பார்த்து பேரணி நடத்தினர். இதில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 1 விவசாயி பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் பல போலீசார் காயமடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த போராட்டம் வேறு திசையில் செல்வதால் போராட்டத்தில் இருந்து 2 வேளாண் சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. அதில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ ஆர்டினேஷன் கமிட்டி என்னும் அமைப்பை சேர்ந்த வி.எம்.சிங் இதனை தெரிவித்துள்ளார். இவர்களை போலவே மற்றொரு சங்கமான பாரதிய கிஷன் சங்கத்தின் ஒரு பிரிவும் இதிலிருந்து விலகியுள்ளது. இவர்கள் எல்லையில் தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
தமிழக மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பு – கல்வித்துறை அறிவிப்பு!!
மேலும் தற்போது செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கலவரத்தில் ஏற்பட்ட சேதத்தையும் தற்போது சரி செய்து வருகின்றனர். பட்ஜெட் தாக்கலின் போது பேரணியாக செல்வோம் என்ற அறிவிப்பை விவசாயிகள் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் அமைதியான முறையில் போராட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழு தங்களது வேலையை தொடங்கியுள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்து இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் விரைவில் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளதால் டெல்லியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.