147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0

தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது கடந்த 7 நாட்களில் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா:

கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்திலும் அவசர கால பயன்பாட்டிற்காக கொரோனா தடுப்பூசியை வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்னும் தடுப்பூசியை வழங்கி வருகின்றனர். மேலும் இதுவரை இந்தியாவில் 23 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை எடுத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பு:

மேலும் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, ‘இந்தியாவில் தற்போது இருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடந்த 7 நாட்களில் 147 மாவட்டங்களை கொரோனா பதிப்பு இல்லை. அதேபோல் கடந்த 28 நாட்களில் 21 மாவட்டங்களிலும், 18 மாவட்டங்களில் 14 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மஹாராஷ்டிராவில் இதுவரை 20 லட்சத்து 13 ஆயிரத்தி 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கேரளாவில் 8,99,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராகும் விவோ நிறுவனம் – கசிந்த தகவல்!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் 1 கோடியே 7 லட்சத்து 1,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,53,847 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 123 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 1,73,740 பேர் சிகிச்சை எடுத்து வருகிறன்றனர். மேலும் 1,03,73,606 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உருமாறிய கொரோனாவால் இதுவரை 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here