அர்ஜுனின் சூழ்ச்சி தெரியாமல் தமிழ் செய்யும் காரியம்.., அடுத்து நடக்கப்போவது இதுதான்!!!

0
அர்ஜுனின் சூழ்ச்சி தெரியாமல் தமிழ் செய்யும் காரியம்.., அடுத்து நடக்கப்போவது இதுதான்!!!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் எப்படியாவது கோதை குடும்பத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்ய வேண்டும் என பல குள்ளநரி திட்டங்களை செய்து வருகிறார். இந்த விஷயம் தெரியாமல் ராகினி அர்ஜுனுக்கு சப்போர்ட்டாக தன் குடும்பத்தை எதிர்த்து நிற்கிறார். ஆனால் கதை நகர்வதைப் பார்த்தால் கூடிய விரைவில் ராகினிக்கு அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தமிழ், நமச்சி இருவரும் சேர்ந்து ராகினியை கடத்தி வருகின்றனர்.
அவர் தன்னை யார் கடத்தினார் என்று தெரியாமல் பதட்டத்தில் இருக்க குடும்பத்தில் உள்ள எல்லோரும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர். மேலும் ராகினியிடம் என்னுடைய பிறந்தநாள் பரிசு இதுதான் என கோதை மருத்துவமனையை அவருக்கு சொந்தமாக கொடுக்கிறார்  தமிழ். மேலும் ராகினியை முதலாளி இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இந்த மருத்துவமனையையும் அர்ஜுன் தன் பெயருக்கு மாற்றி கொண்டு தமிழுக்கு ஆப்பு வைப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here