தமிழகத்தில் இப்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தாலும் சில மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொது தேர்வுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மார்ச் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
TNPSC குரூப் 1 தேர்வர்களே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி.., உடனே APPLY பண்ணுங்க!!