தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் சரியான நேரத்தில் மக்களுக்கு கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இதனை தடுக்க தமிழக அரசு பலமுறை நடவடிக்கை எடுத்த போதிலும் இன்னும் இது போன்ற புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது பகுதிகளில் இதுபோன்று ஏதேனும் புகார்கள் நடந்தால் அதனை உடனடியாக தெரிவிக்க ஹெல்ப்லைன் நம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சமீபத்தில் வெயில் காலம் வருவதால் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நாளில் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மக்களுக்கு ஒரே நாளில் பொருட்கள் வழங்குவதால் அனைத்து பொருட்களும் கடைகளில் முழு அளவில் இருக்க வேண்டும். இதனால் பொருட்களை தவறாமல் 4 நாட்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்குமாறு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அர்ஜுனின் சூழ்ச்சி தெரியாமல் தமிழ் செய்யும் காரியம்.., அடுத்து நடக்கப்போவது இதுதான்!!!