சமீப காலமாக தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேட்டியில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ரெஜினா தன் வாழ்க்கையில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வரும் ரெஜினா பேட்டி ஒன்றில் சினிமாவில் பல நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளது. ஏன் எனக்கு கூட சமீபத்தில் சிலர் போனில் தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என கேட்டனர். ஆனால் அப்போது அதற்கான அர்த்தம் எனக்கு தெரியாததால் சம்பளத்தை பற்றி தான் ஏதோ பேசுகிறார்கள் என நினைத்து விட்டேன்.அதன் பிறகு தான் இந்த அட்ஜஸ்மென்ட்க்கு வேற மீனிங் என்று தெரியவந்தது. இந்த அட்ஜஸ்ட்மெண்ட் சினிமாவில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் பெண்களுக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏன் நான் கல்லூரியில் படிக்கும் போது கூட யாரோ தெரியாத ஒரு நபர் திடீரென என் உதட்டில் கை வைத்து தவறாக நடந்து கொண்டார். அந்த இடத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேலும் இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்வதற்கு கஷ்டமாக தான் இருக்கிறது என தன் வாழ்வில் நடந்த விஷயங்களை ரெஜினா ஓபனாக பேசியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைத்தார்கள் கவனத்திற்கு.., 4 நாட்களில் இந்த பணி முடிக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!