கொரோனாவால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட நிலை – அப்போ ‘மாஸ்டர்’ நிலைமை தானா??

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தளபதி விஐயின் 65வது படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தளபதி 65:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை குறைந்த பொழுது திரையரங்குகளில் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கொரோனா தொற்றிற்கு மத்தியில் மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படம் தான் மாஸ்டர். அந்த அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வழக்கம் போல் தளபதியின் மாஸ்டர் இந்த முறையும் வசூலில் புதிய சாதனை படைத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்பு தளபதி விஜய் தனது 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. ஜார்ஜியா நாட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சில தினங்களுக்கு முன்பு தான் தளபதி விஜய் சென்னைக்கு திரும்பினார்.

பிரபல இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று உறுதி – நடிகர் சாந்தனு வெளியிட்ட பதிவு!!

மேலும் சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடக்க படக்குழுவினர் திட்டம் தீட்டினர். ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிகமான அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ஒத்திவைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here