தன்னை கலாய்த்த இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்த தமிழிசை சவுந்திரராஜன் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தெலுங்கானா புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு பதிவுகளை பதிவு செய்ததை தொடர்ந்து கலாய்க்கும் வண்ணமாக பதிவிட்ட இளைஞருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை.

கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி

தெலுங்கானா புதுச்சேரியின் கவர்னரான தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவர் என்பதால் இப்பேரிடர் காலத்தில் மக்களுக்கு கோரோனோ பற்றிய விழிப்புணர்வும் அதனை தடுக்க நம் செய்யவேண்டியவை என பல விழிப்புணர்வு பதிவுகளை பதிவிட்டு வருகின்றார். கடைசியாக ‛வாழ்வாதாரத்தை விட, உயிர் முக்கியம்’ என்று அவர், ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதனை கவனித்த இளைஞர் ஒருவர் அதற்கு ‘உங்கள் மூன்று மாத சம்பளத்தை, ‘பிஎம் கேர்’ நிதியாக கொடுங்க’ என பதில் ட்வீட் செய்து இருந்தார்.

இளைஞர் கூறியதை கவனித்த தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி பதிவாக தான் அறிவுரை மட்டும் கூறுபவர் அல்ல என உணர்த்தும் வகையில் ‛சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு லட்ச ரூபாய் என, இதுவரை, 12 லட்ச ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறேன். தெலுங்கான முதல்வர் நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை முழுமையாக வழங்கி இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ட்விட்டர் பதிவுகளில் நடைபெறும் பல்வேறு சண்டைகளுக்கு மத்தியில் தன்னை கலாய்த்த இளைஞருக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலடி கொடுத்த தமிழிசையின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here