அந்த மனசு தான் சார் கடவுள் – இறந்தவர்களை எரிக்க இடம் கொடுத்த மனிதநேயம்மிக்க விவசாயி!!

0

கொரோனா இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் பரவி பல உயிரிழப்பிற்கு காரணமாகி வருகிறது. இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு இடமில்லாத நிலையில் தனது விவசாய நிலத்தை கொடுத்து மனிதநேயத்தை காட்டியுள்ளார் விவசாயி..

மனிதநேயமே என்றும் ஜெயிக்கும்:

கொரோனா முதல் அலையின் போது மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையானது மக்களின் உயிரை பறிக்கும் கொள்ளை நோயாக மாறி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் பலர் சிகிச்சை பெற முடியாமல் உயிரை இழந்து வருகின்றனர். அதனால் தகனம் செய்யும் இடம் நிரம்பி வழிகிறது. எனவே இறந்தவரை தகனம் செய்வதற்காக சுடுகாட்டில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உத்தரபிரதேச மாநிலம் சாஹிபாபாத் அடுத்த கர்ஹெராபில் வசிக்கும் சுஷில் குமார் என்ற விவசாயி கொரோனா தோற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக தனது நிலத்தில் ஒரு பகுதியை கொடுப்பதாக அவர் கூறினார். இது குறித்தது அவரிடம் கேட்கும்போது , கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு பலநூறு மக்கள் இறந்து கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக பலமணி நேரம் காத்திருப்பது வருத்தம் அளிக்கிறது எனவும் அதனால் தனது நிலத்தின் ஒரு பகுதியை தருவதாகவும் அவர் கூறினார். மனிதநேயத்துடன் செயல்பட்ட விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here