திரையுலகில் முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அவர்களுக்கும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ்
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் இந்த இரண்டாவது அலை ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி வருகிறது. முதல் அலையை விட இது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் பல கடுமையான கட்டுபாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல பிரபலங்களும் இந்த கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். எஸ்.பி.பி, பாண்டு என பல பிரபலங்களை திரையுலகம் இழந்து தவித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை சாந்தனு தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடன் இருந்தவர்களும் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் சாந்தனு. மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் வீட்டில் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர்கள் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.