ஜூன் 1 முதல் கோவில்கள் திறப்பு – பக்தர்கள் வழிபட அறநிலையத்துறை அனுமதி..!

0

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.

கோவில்கள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 50 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் பக்தர்கள் அனுமதியின்றி உரிய பாதுகாப்புடன் நடத்தப்பட்டு ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. கோவில்களில் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here