அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்த காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அம்பன் புயல்:
தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் வரும் 28ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த அம்பன் புயல் ஒடிசா, மேற்குவங்கம் என வடக்கு திசையை நோக்கி நகர தொடங்கி உள்ளது.
இந்த காரணத்தால் புயலுடன் சேர்த்து தமிழகத்தில் ஈரப்பதமும் கூடவே சென்று விட்டது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, வேலூர், திருத்தணி, திருச்சி, மன்னார்குடி, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியை தொடும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்குமாறும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ண வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |