தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!!!

0
தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அந்தமானில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 19ம் தேதி தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், விருதுநகர், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய அதி கனமழை (20 செ. மீக்கு மேல்) பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here