தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. அம்பன் புயல் காரணமாக நாளை வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சம் 38 டிகிரி வரையும், குறைந்தபட்சம் 29 டிகிரி வரையில் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |