ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் இதில் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. எபோலா வைரஸிற்கு அவர்கள் தான் தடுப்பு மருந்தை உருவாக்கினார்கள் என்பதால் கொரோனாவிற்கும் விரைவில் தடுப்பூசி தயாராகி விடும் என கூறப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனாவிற்கு சாடோக்ஸ் 1 என்கோவ் 19 ((ChAdOx1 nCoV-19,)) எனும் தடுப்பு மருந்தை உருவாக்கி இருந்தனர். இந்த மருந்தினை கொரோனா பாதித்த குரங்குகளுக்கு கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் முடிவில் மருந்து அளிக்கப்பட்ட குரங்குகளின் மூக்கில் கொரோனா வைரஸ் மாதிரிகள் இருந்ததாகவும், வேகமாக மூச்சிறைக்கும் தன்மை இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட மற்றும் அளிக்கப்படாத இரு குரங்குகளுமே ஒரே நிலையில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. இதனால் இந்த சோதனை தோல்வி அடைந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இது வெற்றி பெற்றால் 30 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிப்பது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் பிரிட்டன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |