அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வானிலை நிலவரம்:
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 10.02.2021 முதல் 14.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே நிலவும். அடுத்த 24 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வட மேற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்சமாக வெப்பநிலை 21 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் புதிய சாதனை – விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி!!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். எனவே அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்துள்ளது.