தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை மற்றும் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அடுத்தகட்டமாக அவர் இன்று சேலம் செல்கிறார். அங்கு செல்லும் பொழுது அவர் முதலாவதாக ஓமலூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அதன்பின்பு அவர் சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு செல்கிறார். இந்நிலையில் தற்போது ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுஎன்னவென்றால் இன்று காலை மாநகர காவல் கட்டுப்பாடு அறைக்கு ஒரு தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை மற்றும் சேலத்தில் உள்ள இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு ஆய்வாளர்கள் மோப்ப நாய் உதவியுடன் முதல்வரின் 2 இல்லத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.
உயிருக்கு போராடும் கண்ணம்மாவுக்கு உதவிய பாரதி – இன்றைய எபிசோட்!!
சோதனையில் வெடிகுண்டு சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் இல்லை, தொலைபேசி மூலம் வந்த தகவல் போலியானவை என்று தெரிவித்தனர். தற்போது தொலைபேசி மூலம் மிரட்டல் விட்ட நபரை திருப்பூரில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்த நபரிடம் போலீசார் இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.