உயிருக்கு போராடும் கண்ணம்மாவுக்கு உதவிய பாரதி – இன்றைய எபிசோட்!!

0

ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கண்ணம்மாவை பாரதி காப்பாற்றினாரா, கண்ணம்மா உயிர் பிழைத்தாரா எனும் கதைக்களத்தோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் வெளியாகவுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மாவை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கண்ணம்மாவின் சித்தி கண்ணம்மாவின் அப்பாவை கடைக்கு சென்று நெய் வாங்கிவர சொல்லுகிறார். தைப்பூசம் வருவதால் மைசூர்பாகு செய்து அஞ்சலிக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறார். கடுப்பான கண்ணம்மாவின் அப்பா, அம்மாவும் மகளும் சேர்ந்து நல்லா நிம்மதியா இருக்கீங்க, என் மகள் கண்ணம்மா எங்கே இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என புலம்புகிறார்.

இதை கேட்ட கண்ணம்மாவின் சித்தி உன் மகளுக்கு உன்மேல பாசம் இருந்தால் அவள் உன்னை தேடி வந்திருப்பாள் என கூட கொஞ்சம் வெறுப்பேற்றி விடுகிறார். அவளுக்கு நான் செய்த துரோகம் பெருசு. ஆனால் நிச்சயமாக ஒருநாள் கண்ணம்மா என்னை தேடி வருவாள் என நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கண்ணம்மா உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

அங்கு நிற்கும் பாரதி கண்ணம்மாவின் நிலைமையை பார்த்து என்னோட அன்பையும் காதலையும் நீ கொச்சைப்படுத்திட்டியே என மனதுக்குள் நினைக்க, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கண்ணம்மா மாமா என்று சொல்கிறார். அதை கேட்ட பாராதிக்கு மனது கலங்கி விடுகிறது. அழுதுகொண்டே அறையை விட்டு வெளியேறுகிறார்.

வெளியே நிற்கும் துளசி பாரதியை பார்த்து கண்ணம்மா எப்படி இருக்கிறாள் என கேட்கிறாள். கண்களை துடைத்துக்கொண்ட பாரதி, நாம நினைத்ததை விட நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய நண்பன் ஒரு நுரையீரல் ஸ்பெசலிஸ்ட், 80,000 ரூபாய் உள்ள ஒரு மருந்தை உடனே போட்டால் சரியாகும் என என்று சொல்கிறார்.

அந்த அளவுக்கு பணம் என்கிட்ட இல்லையே என துளசி புலம்ப, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க என கூறி அந்த இடத்தை விட்டு நகர்கிறார் பாரதி. ஊருக்கெல்லாம் நல்லது செய்யும் பாரதி சொந்த மனைவிக்கு நல்லது செய்ய முடியாத அளவுக்கு சந்தேக பேய் ஆட்டிப்படைக்குது என மனதுக்குள் நினைத்து கொள்கிறார் துளசி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வரும் லட்சுமி கண்ணம்மாவை தேடுகிறார். தனியாக வெளியே சென்று மயங்கி விழுந்துவிட்டாரோ என் நினைத்து கலங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு கண்ணம்மாவை தேடி வந்த வீட்டு ஓனரின் மனைவி அவரை காணவில்லை என லட்சுமி கூறிவிட்டு அழுகிறாள். லட்சுமியை சமாதானப்படுத்துகிறார் அவர்.

சௌந்தர்யா கண்ணம்மா போட்டோவை வைத்துக்கொண்டு யோசித்து கொண்டிருக்க அங்கு மல்லிகா காபி கொண்டு வருகிறார். ராத்திரி முழுக்க கெட்ட கனவு என கூறி கொண்டே காபியை வாங்கும் போது காபியுடன் சேர்ந்து போட்டோவும் கீழே விழுந்து உடைகிறது.

ஹாஸ்பிடலில் துளசி, அவருக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து பணம் கேட்கிறார். ஆனால் எல்லாரும் பணம் தர மறுக்கிறார்கள். அங்கு வந்த நர்ஸ் பணத்தை வேகமாக கட்ட சொல்லி வற்புறுத்துகிறார். பாரதி நினைத்தால் கண்ணம்மாவை காப்பாற்றலாம் என புலம்புகிறார் துளசி.

சௌந்தர்யா ஆன்டி கிட்ட சொல்லலாம் என நினைத்துக்கொண்டு அவருக்கு போன் செய்யும் போது பாரதி வந்துவிடுகிறார். பணத்தை ரெடி பண்ணிட்டிங்களா என கேட்க நீங்கதான் ஏதாவது உதவி பண்ணனும், கண்ணம்மா பாவம் என துளசி கூறுகிறார். அப்போது மருந்துக்கான பெயரை எழுதி கொடுத்து சீக்கிரமாக வாங்கி வர சொல்லி பாரதி கூறுகிறார். இதோடு இன்றைய தொடர் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here