தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 21 (திங்கட்கிழமை) முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் ஒரே வகுப்பிற்கு 20 மாணவர்கள், சமூக இடைவெளி, பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்துப்பூர்வ அனுமதி, சுழற்சி முறை வகுப்புகள் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் ஆந்திரா, அசாம் மாநிலங்கள் செப்.21 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்து உள்ளன. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதியாக தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதை போன்று, பள்ளிகள் திறப்பில் பெற்றோர்களின் கருத்தும் மாறுபடுகிறது. இதனால் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு என்பது ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
6000 இளைஞர்களுக்கு வேலை, 60,000 பேருக்கு பயிற்சி – பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு!!
மேலும் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்படாது என தெரிவித்து உள்ளார். ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் தொடங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.
Tet pass no job we are begging for food but Admk government really worth less i can prove