தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள், கொரோனா தாக்கத்தால் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தவறவிட்ட தேர்வுகளுக்கு மறுதேர்வு ஆகியவற்றிற்கான தேர்வுகள் வரும் ஜூன் 15 முதல் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்யப்பட்டதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் சங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே அன்லாக் 1.0ல் மத்திய அரசு அறிவித்த படி, ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் பெற்றோர்களிடம் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |