தமிழகத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து சில தகவல்களையும் அமைச்சர் கூறி உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்கும் வகையில் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. தனியார் டிவி சேனல்கள் மூலம் இது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளை தற்போதைக்கு திறக்க இயலாது. இது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த வருடம் பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனையின் பேரில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலை அளிப்பதாகவும், அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விகொள்கை குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்து உள்ளது. அவர்களின் பரிந்துரையின் பேரில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு 1.78 லட்சம் இலவச ஸ்மார்ட்போன்கள் – மாநில அரசு விநியோகம்!!
தமிழக அரசின் நடவடிக்கைகளை இந்தியாவே பார்த்து வியப்பதாக கூறிய அமைச்சர், தமிழகத்தில் மட்டும் தான் QR கோடு மூலம் பாடம் கற்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.