கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசும் பல நிதிகளை அளித்த போதிலும் மக்களிடம் அரசு நிதி கேட்டிருந்தது. கொரோனா தடுப்பு மற்றும் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் நடிகர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நன்கொடை
உலக நாடுகள் பலவற்றையும் மிரளவிட்டு வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.
இதனால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் மக்களிடம் அதாவது தொழில் அதிபர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு என கோரிக்கை விடுத்து வருகின்றன.
அஜித், சிவகார்த்திகேயன்
அதன்படி நடிகர் அஜித்துகுமார் 50 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதன்மை நாடகர்களான ரஜினி, விஜய் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. தமிழக அரசுக்கு கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியோ 88 லட்சம்மு 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது என்றும் இதுவரை மொத்தமாக 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |