தமிழக்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ல் இருந்து 1242 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ரிப்போர்ட்:
தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 14 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு நல்ல செய்தியாக 117 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து இதுவரை குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கை – 21,994
- பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை – 17,835 பேர்
- தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை – 26
- இன்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 2,739
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |