கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் தளர்வு கொடுக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. நீங்கள் வசிக்கக்கூடிய பகுதி ஹாட்ஸ்பாட்தானா அல்லது சாதாரண பகுதியா என்பதை எப்படி கண்டறிவது என்பதை பார்ப்போம்.
ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கெடுபுடி..!
ஹாட்ஸ்பாட் என்று கூறக்கூடிய பகுதிகளில் இப்போது இருப்பதை விடவும் கெடுபிடிகள் அதிகரிக்கும். ஆனால் மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் ஹாட்ஸ்பாட் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்படுகிறது. அதை சுற்றிலும் சுமார் மூன்று கிலோமீட்டர் பகுதி முழுக்க சுகாதார துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழே சென்று விடும்.
ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு..!
ஹாட்ஸ்பாட் என்றழைக்கப்படும் கூடிய பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் இருக்கும் என்ற போதிலும் கூட மக்கள் நடந்து சென்று ஒவ்வொருவராக அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஹாட்ஸ்பாட் என்று அழைக்க கூடிய பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் சமூக பரவல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அப்படியான நிலை ஏற்பட்டவுடன் அந்த பகுதி சீல் செய்யப்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
சீல் வைக்கப்படும் பகுதிகளில் டோர் டெலிவரி..!
சீல் வைக்கப்படும் பகுதிகளில் உரிய பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ்கள் அவசர தேவைகளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. வீடுகளுக்கே காய்கறி உள்ளிட்டவை சப்ளை செய்யப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகாரிகள் சென்று மக்களிடம் நோய் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வார்கள்.
புள்ளி விபரம்..!
சீல் செய்யப்பட்ட ஏரியாக்களுக்கு உள்ளே மீடியாக்கள் கூட செல்ல முடியாது. குறிப்பிட்ட ஒரே ஏரியாவில் 6 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களை கவனித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதில் ஏரியா என்பது சில ஊர்களில் வார்டு என்பதை குறிக்கும் சில நகரங்களில் சட்டசபை தொகுதியை குறிக்கும். ஹாட்ஸ்பாட் என்ன என்பதை அரசே அறிவிக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |