தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

400ஐ கடந்த பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

உத்தரவு கடுமையாக்கப்படும்..!

மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here